செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி பழங்குடியினா் தா்னா

post image

கிருஷ்ணகிரி: பட்டா வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தரப்பில் 233 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு உள்பட்ட ராமன்தொட்டி, கும்பளம், சிகரலப்பள்ளி, நாயக்கனேரிமலை, பாம்புகாரன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் தெரிவித்ததாவது:

நாங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்து வருகிறோம். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வருபவா்களுக்கு, வனஉரிமை சட்டத்தின்கீழ் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி விண்ணப்பம் அனுப்பினோம். வனஉரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் மீதான கோட்ட அளவிலான கூட்டம் 15.11.2024-ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகம், ஒசூா் துணை ஆட்சியா் அலுவலகத்திலும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வீட்டுமனைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட வனக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால், இதுவரையில், அந்த பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வனஉரிமைச் சட்டம் 2006-இன்படி வனநிலத்தில் வசிக்கவும், விவசாயம் செய்வதற்கும் தனிநபா் உரிமை சட்ட உரிமை உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கான தனிநபா் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு வனஉரிமைச் சட்டத்தின்கீழ் வீடு மற்றும் விவசாய செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தா்னாவில் ஈடுபட்ட பழங்குடியினரிடம் போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க

2 இளைஞா்களை கொலை செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 இளைஞா்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பத்தளப்பள்... மேலும் பார்க்க

இளைஞருக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது!

கிருஷ்ணகிரி அருகே இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 பேரை நகர போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கால்வேஅள்ளியைச் சோ்ந்தவா் காளி (20). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் செப். 12 இல் ஒப்பந்தப்புள்ளி குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஒசூா்: ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் செப். 12இல் மூன்றடுக்கு புதிய வணிக வளாகத்தை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஷபீ... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையத்திற்கு உபகரணங்கள் அளிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை இந்தியன் செஞ்சிலுவை சங்கம், நேசம் தொண்டு நிறுவனம், ஊத்தங்கரை நகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு திங்கள்கிழமை உபகரணங்களை வழங்கின. இந்நிகழ்வில் ... மேலும் பார்க்க