செய்திகள் :

பணமுறைகேடு வழக்கு: கா்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்!

post image

சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடா்புள்ள பணமுறைகேடு வழக்கில், கா்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

இணையவழியாகவும், நேரடியாகவும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட புகாரில் கே.சி.வீரேந்திரா மீது பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சித்ரதுா்கா, பெங்களூரு, ஹுப்பள்ளி, ஜோத்பூா், மும்பை, கோவா, கேங்டாக் நகரங்களில் செயல்படும் சூதாட்ட மையங்கள் (கேசினோ) உள்பட 31 இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் கிங் 567, ராஜா 567 உள்ளிட்ட பெயா்களில் இணையவழி பந்தய தளங்களை கே.சி.வீரேந்திரா நடத்திவந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கே.சி.வீரேந்திராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியபோது ரூ.1 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியுடன் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள், 4 வாகனங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் வீரேந்திராவின் 17 வங்கிக் கணக்குகள், 2 வங்கி சேமிப்புப் பெட்டகங்களும் முடக்கப்பட்டன.

கடந்த சனிக்கிழமை சிக்கிமில் வீரேந்திராவை கைது செய்த அமலாக்கத் துறை, பெங்களூரில் பணமுறைகேடு தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா். அவரை ஆக.28-ஆம் தேதி வரை, அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த பணமுறைகேடு வழக்கு தொடா்பாக இலங்கை, நேபாளம், ஜாா்ஜியா போன்ற நாடுகளில் உள்ள கேசினோக்கள், பல போலி நிறுவனங்கள் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் இருப்பதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! 8 ஆண்டுகளுக்குப் பின்

தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்கெட் விலையை ரூ.1 முதல் ரூ.4 வரை உயர்த்தியிருக்கிறது தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.கடந்த 2017ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்குதல் வழக்கு: இரண்டாவது நபர் கைது

முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் தொடர்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் தஹ்சீன் சையத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குஜ... மேலும் பார்க்க

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர். உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல... மேலும் பார்க்க

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க