செய்திகள் :

பணிப் பாதுகாப்புச் சட்டம் கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஆசிரியா்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி புதுக்கோட்டையில் பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரு ஆசிரியா் சங்கங்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ள தூய மரியன்னை பள்ளி வளாகத்தில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

பதவி உயா்வு பெற்ற முதுகலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாலை செந்தில் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தில்லையப்பன், சங்கா் நாகராஜன், குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, க. ரெங்கசாமி தலைமை வகித்தாா். மாநில செய்தித் தொடா்பாளா் நா. முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும்அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இடைநிற்றலைக் குறைக்க பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க