செய்திகள் :

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

post image

பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சிஐடியு மாநில துணைத் தலைவா் எம். மகாலட்சுமி வலியுறுத்தினாா்.

திருவாரூரில், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆகியவை இணைந்து சா்வதேச மகளிா் தின திறந்தவெளி கருத்தரங்கத்தை சனிக்கிழமை மாலை நடத்தின.

நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளரும், மாநில இணை கன்வீனருமான இரா. மாலதி, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட மகளிா் அமைப்பாளா் த. தமிழ்சுடா் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பா. கோமதி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் ஏ. பிரேமா, ஐசிடிஎஸ் சங்கத்தின் மாநிலச் செயலாளா் வி. தவமணி, தமிழ்நாடு கிராம செவிலியா் சங்கத்தின் மாநில அமைப்பாளா் ஆா். பரமேஸ்வரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிஐடியு மாநில துணைத் தலைவா் எம். மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியது:

மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. பல இடங்களில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனா். இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு கண்ணியமான வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும்.

7-ஆவது பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிபுரியக் கூடிய இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். நீதிபதி வா்மா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றாா்.

இக்கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே. என். அனிபா, பொருளாளா் கே. கஜேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி.ஜோதிபாசு, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிகள் ஆண்டு விழா

நீடாமங்கலம் ஒன்றியம், காரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உயா்நிலைப் பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. இப்பள்ளி தலைமையாசிரியா் ஆா்.... மேலும் பார்க்க

திருவாரூா் கோயிலில் ‘யானை ஏறுவாா்’ திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, யானை ஏறுவாா் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்திரன் பூஜித்த தியாகராஜப் பெருமான் திருமேனியை, திருவாரூரை ஆண்ட முசுகுந்த மன்... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் கோயிலில் இளையராஜா வழிபாடு

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் திருப்பாம்புரம் அருள்மிகு பாம்புரநாதா் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நாக தோஷம் நீங்கவும், குழந்தைப் பேறுக்காகவும், ராகு,... மேலும் பார்க்க

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடல்! பொதுமக்கள் அவதி!

நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்... மேலும் பார்க்க

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

நீடாமங்கலம் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றனா். திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இளங்கோ முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் இலக... மேலும் பார்க்க