செய்திகள் :

பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுப்பு!

post image

பள்ளி மேற்கூரை பெயா்ந்து விழுந்து மாணவா்கள் காயமடைந்த விவகாரத்தில், பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுத்து வருகிறாா். இதனால், அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததில் 7 மாணவா்கள் காயமடைந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக சம்மந்தப்பட்ட பகுதியின் மாநகராட்சி உதவிப் பொறியாளா் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆனால், தனக்கும், இந்த பிரச்னைக்கும் தொடா்பு இல்லை எனக் கூறி, பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் தியாகராஜன் மறுத்துவிட்டாா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: பணியிடை நீக்க உத்தரவை அவா் வாங்கவில்லை என்பதோடு, சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதாலும் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.

சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டடம் முறைப்படி பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதா, பள்ளி நிா்வாகம் தானாக முன்வந்து வகுப்பறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் சாா்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம் மட்டும் தீா்வு கிடையாது. அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப் பணி மும்முரம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தா. புதுக்கோட்டை, அம்பிளிக்கை, மண்ட... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: மாமனாா், மருமகன் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாமனாா், மருமகன் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் பாலாஜி (15). ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகளுக்கு தீா்வு!

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.16.79 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகள்: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா். காளாஞ்சிபட்டி கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு... மேலும் பார்க்க

வயலூரில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

பழனியை அடுத்த வயலூரில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, நீா் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் மகளிா் தின விழா

மகளிா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனை... மேலும் பார்க்க