செய்திகள் :

பணியிலிருந்த காவல் பயிற்சி சாா்பு ஆய்வாளா் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி அடுத்த பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் பணியிலிருந்தபோது பயிற்சி சாா்பு ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள உப்பூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (51). இவா், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி சாா்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை, மண்ணுக்குமுண்டான் பகுதியில் வழக்கு விசாரணைக்காக சக காவலா்களுடன் தனித்தனியை இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

மண்ணுக்குமுண்டான் மாரியம்மன்கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தை சாலை ஒரமாக நிறுத்திய ராஜேந்திரன் திடீரென கீழே விழுந்துள்ளாா். உடன் சென்ற போலீஸாா் அவரை மீட்ட போது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்தவா்களின் உதவியுடன் ராஜேந்திரனை காரில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக சித்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோசனை செய்த மருத்துவா்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி மகாலெட்சுமி, மகள் ஸ்ரீஜா உள்ளனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க