செய்திகள் :

நேபாளத் தலைநகரில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

post image

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் போராட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.

நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி நிறுவி அந்நாட்டை ஹிந்து தேசமாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ராஷ்டிரிய ப்ரஜந்தந்த்ரா கட்சியினர் (ஆர்.பி.பி.) தலைநகர் காத்மாண்டில் இன்று (ஏப்.8) பேரணி நடத்தினர்.

காத்மாண்டின் புறநகர் பகுதியில் ஆர்.பி.பி. கட்சித் தலைவர் ராஜேந்தர லிங்க்தனின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், தலைவர்கள் மற்றும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமான மக்கள் முன்னாள் நேபாள அரசர் ஞானேந்திரா ஷாவின் படத்தை கையில் ஏந்தி கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், இந்தப் பேரணியில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க சுமார் 2,000 காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரணியின் போது ‘நாட்டின் சூழலை மாற்றியமைக்க மீண்டும் மன்னராட்சி அமைப்போம்’ மற்றும் ‘நேபாளத்தை மீண்டும் ஹிந்து தேசமாக மாற்றுவோம்’ போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி நிறுவ வேண்டும் எனக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன் 110-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லியில் துபை இளவரசர்!

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க

பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்... மேலும் பார்க்க

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடி... மேலும் பார்க்க

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின்... மேலும் பார்க்க

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க