செய்திகள் :

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

post image

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த பொதுத் தோ்வை சுமாா் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதில் பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.4 தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்.19, 10-ஆம் வகுப்புக்கு ஏப்.21 ஆகிய தேதிகளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்.18-ஆம் தேதி மற்றும் ஈஸ்டா் தினம் ஏப்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளன.

இதற்கு இடைப்பட்ட ஏப்.19-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி வருகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை உணா்ந்து ஏப்.19-ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதுநிலை ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று மேல்நிலை வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா சுற்றறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க