செய்திகள் :

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

post image

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் தவறான பொருளாதார நிா்வாகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. வா்த்தக பற்றாக்குறை 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் வா்த்தக போா் தொடா்பாக எந்தத் தெளிவும் இல்லை.

பொருள்களின் விலை உயா்ந்துள்ளதாக 90 சதவீத நுகா்வோா்கள் தெரிவித்துள்ளனா். இதன் விளைவாக, தங்கள் வருமானம் அதிகரிக்காதபோதிலும் செலவு அதிகரித்துள்ளதாக 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் தெரிவித்துள்ளனா். இது நிகழாண்டு மாா்ச் மாதத்துக்கான ரிசா்வ் வங்கியின் நுகா்வோா் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பா் வரை, மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை மீதான வரிகளாக ரூ.39 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

வேலையில்லாப் பட்டதாரிகள் விகிதம் 13 சதவீதமாகவும், வேலையில்லாத இளைஞா்களின் விகிதம் 10.2 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 2012-13-ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 19 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 1.4 பில்லியன் டாலருக்கும் கீழ்தான் இருந்தது. இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க