செய்திகள் :

2000 ரன்களைக் கடந்த நிக்கோலஸ் பூரன்! ஐபிஎல் தொடரில்..!

post image

ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இன்றையப் போட்டியில் லக்னௌ - கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 238 ரன்கள் குவித்து கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது.

அதிரடியாக விளையாடிய மிட்சல் மார்ஷ் 81 ரன்களும் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும் (7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்தனர்.

இதையும் படிக்க: மார்ஷ், பூரன் அரைசதம் விளாசல்: கொல்கத்தாவுக்கு 239 ரன்கள் இலக்கு

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன், மூன்று அரைசதங்களுடன் 288 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு நிறத் தொப்பியையும் தன்வசமாக்கியுள்ளார்.

தன்னுடைய 7-வது ஐபிஎல் தொடரில் விளையாடும் நிக்கோலஸ் பூரன் 81 போட்டிகளில் விளையாடி 2057 ரன்களைக் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் 2000 ரன்களை எட்டுவதற்கு அவர் 1198 பந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

ஆன்ரே ரஸ்ஸல் அதிவேகமாக1120 பந்துகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். அவருக்கு அடுத்ததாக இந்திய வீரர் விரேந்திர சேவாக் 1211 பந்துகளிலும், கிறிஸ் கெயில் 1251 பந்துகளிலும், ரிஷப் பந்த் 1306 பந்துகளிலும், மேக்ஸ்வெல் 1309 பந்துகளிலும் 2000 ரன்களை எட்டியவர்கள் வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதையும் படிக்க: ஏப்.7ஆம் தேதியும் க்ருணால் பாண்டியாவும்..! மல்டிவெர்ஸ் சாதனைகள்!

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்... மேலும் பார்க்க