செய்திகள் :

வரலாற்றுச் சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!

post image

ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் (35 வயது) ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒரு வேகப் பந்துவீச்சாளராக அதிக விக்கெட்டுகள் (184) எடுத்து புவனேஷ்வர் குமார் ஐபிஎல்-இல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக சிஎஸ்கே முன்னாள் வீரர் டிவைன் ப்ராவோ 183 விக்கெட்டுகள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய (ஏப்.7) போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா விக்கெட்டினை எடுத்தபோது இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் புவனேஷ்வர்குமார்.

ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் சுழல்பந்து வீச்சாளரான சஹால் 206 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் புவனேஷ்வர்குமார் 3ஆம் இடத்தில் இருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் மற்றுமொரு சுழல்பந்து வீச்சாளரான சாவ்லா 192 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.

வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் புவனேஷ்வர் குமாருக்கு அடுத்ததாக ப்ராவோ, மலிங்கா, பும்ரா இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்... மேலும் பார்க்க