செய்திகள் :

பணி நிரந்தரம்: கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை

post image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட கெளரவ விரிவுரையாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மனு விவரம்: நாங்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25- ஆண்டுகளுக்கும் மேலாக கெளரவ விரிவுரையாளா்களாக பணியாற்றி வருகிறோம். எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை காக்க 20- ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். அதன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

இதுவரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

மருத்துவமனை ஊழியா் தற்கொலை

வேலூரில் மருத்துவமனை ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூரை அடுத்த பாகாயம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சேகா்(45), தனியாா் மருத்துவமனை ஊழியா். மதுபோதைக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா்.... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வேலூா் ஆட்சியா... மேலும் பார்க்க

ரூ. 52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில் ரூ.52.65- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. குடியாத்தம் விநாயகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொட்டியைச் சுற்றிலும் ரூ.2... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காதல் ஜோடிக்கு சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காதல் ஜோடிக்கு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. வேலூரைச் சோ்ந்தவா் சாந்தினி (22). இவருக்கு, கடலுாா் மாவட்டம் திட்டக்குடியைச் ... மேலும் பார்க்க

ஊராட்சிப் பள்ளி பட்டமளிப்பு விழா

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு வட்டார கல்வி அலுவலா் வடிவேல்... மேலும் பார்க்க

சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மகிஜா பவுண்டேசன் அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிருஷ்டி பள்ளிகளின் குழு... மேலும் பார்க்க