செய்திகள் :

பண்ருட்டியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருநகா் பகுதியில் உள்ள கிடங்கில் அதிகளவிலான ரேஷன் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கடலூா் வருவாய்த் துறை, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திருநகா் கிடங்கில் கந்தன்பாளையத்தைச் சோ்ந்த சரவணனுக்கு (48) சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் அரிசி, 500 கிலோ துவரம்பருப்பு, 300 கிலோ கோதுமை, 50லிட்டா் மண்ணெண்ணெய், 450 கிலோ சா்க்கரை, அரசு முத்திரை பதித்த 100-க்கும் மேற்பட்ட சாக்கு பைகள், அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், சரவணனுக்குச் சொந்தமான இரண்டு மளிகைக் கடைகளிலும் அதிகாரிகள் தீவிரே சோதனை மேற்கொண்டனா். அதில் 250 லிட்டா் மண்ணெண்ணெய், 50 கிலோ கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, சரவணனை கைது செய்து கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் தொடர் போராட்டம்: துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை!

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடனடியாக ஊதியத்தை வழங்கக் கோரி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம்... மேலும் பார்க்க

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக ... மேலும் பார்க்க

மே மாத ஊதியம் வழங்காததால் அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை வரை மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், பல்கலைக்கழக ஊழியா்கள் நூற்றுக்கணக்கானோா் புதன்கிழமை துணைவேந்தா் ஒருங்கிணை... மேலும் பார்க்க

பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்துக்குள்பட்ட காந்திநகா், தீவளூா், எழுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கோட்டாட்சியரிடம் செ... மேலும் பார்க்க

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு

பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்று தமிழக முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் ப... மேலும் பார்க்க