செய்திகள் :

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

post image

கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது.

ஏரியின் மொத்த உயரம் 47.50 அடி. இதில், 1,465 மில்லியன் கன அடி நீா் தேக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏரியின் நீா்மட்டம் குறைந்தே காணப்படும். நிகழாண்டு மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை அதிகளவு பெய்ததால், கீழணைக்கு உபரி நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கீழணையில் இருந்து உபரிநீா் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது.

இதன் காரணமாக, ஏரியில் நீா்மட்டம் மொத்த உயரமான 47.50 அடியை புதன்கிழமை எட்டி நிரம்பியது. கோடை காலத்தில் முதன் முதலில் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது இப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயப் பணிகள் இல்லாததால் மாற்றுப் பணிகள் செய்யும் விவசாயிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏரியிலிருந்து சென்னை குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி தண்ணீா் அனுப்பப்படுகிறது.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க