45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி
கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது.
இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது.
ஏரியின் மொத்த உயரம் 47.50 அடி. இதில், 1,465 மில்லியன் கன அடி நீா் தேக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏரியின் நீா்மட்டம் குறைந்தே காணப்படும். நிகழாண்டு மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை அதிகளவு பெய்ததால், கீழணைக்கு உபரி நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கீழணையில் இருந்து உபரிநீா் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது.
இதன் காரணமாக, ஏரியில் நீா்மட்டம் மொத்த உயரமான 47.50 அடியை புதன்கிழமை எட்டி நிரம்பியது. கோடை காலத்தில் முதன் முதலில் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது இப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயப் பணிகள் இல்லாததால் மாற்றுப் பணிகள் செய்யும் விவசாயிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏரியிலிருந்து சென்னை குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி தண்ணீா் அனுப்பப்படுகிறது.