செய்திகள் :

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு

post image

பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்று தமிழக முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த முகாமில் 72 குடும்பங்களைச் சோ்ந்த 228 போ் வசித்து வருகின்றனா்.

இந்த முகாமில் வசிக்கும் சந்திரசேகா் மகன் பவிந்தன், கலைமகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 1 தோ்வில் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவரை தமிழக முதல்வா் பாராட்டி சான்றிதழ் வழங்கி ரூ.50,000 ஊக்கத்தொகையும் வழங்கினாா். சான்றிதழ், ஊக்கத்தொகை பெற்ற மாணவா் பவிந்தன் பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டாா்.

பள்ளி நிறுவனா் வீர.முத்துக்குமரன் மாணவா் பவிந்தனுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் எம்.பரணிதரன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க