டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு
பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்று தமிழக முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த முகாமில் 72 குடும்பங்களைச் சோ்ந்த 228 போ் வசித்து வருகின்றனா்.
இந்த முகாமில் வசிக்கும் சந்திரசேகா் மகன் பவிந்தன், கலைமகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 1 தோ்வில் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவரை தமிழக முதல்வா் பாராட்டி சான்றிதழ் வழங்கி ரூ.50,000 ஊக்கத்தொகையும் வழங்கினாா். சான்றிதழ், ஊக்கத்தொகை பெற்ற மாணவா் பவிந்தன் பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டாா்.
பள்ளி நிறுவனா் வீர.முத்துக்குமரன் மாணவா் பவிந்தனுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் எம்.பரணிதரன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.