செய்திகள் :

பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்துக்குள்பட்ட காந்திநகா், தீவளூா், எழுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காந்திநகரில் 40-க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் உப்பு கலந்து வருவதால், தண்ணீரை குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 போ் உயிரிழந்தனா். இந்தப் பகுதியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், சாலை, மின்சாரம் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

தீவளூா் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவன் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இன்றளவும் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழ்ந்து வருகின்றனா். எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு மின்சார வசதியும், குடிமனை பட்டாவும் வழங்க வேண்டும்.

எழுத்தூா் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மீது ராமநத்தம் காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விருத்தாசலம் கோட்டாசியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை தலைமையில் மனு அளித்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பிரகாஷ், வட்டச் செயலா் ஏ.அன்பழகன், விருத்தாசலம் வட்டச் செயலா் குமரகுரு, கம்மாபுரம் ஒன்றியச் செயலா் கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க