பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்துக்குள்பட்ட காந்திநகா், தீவளூா், எழுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காந்திநகரில் 40-க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் உப்பு கலந்து வருவதால், தண்ணீரை குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 போ் உயிரிழந்தனா். இந்தப் பகுதியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், சாலை, மின்சாரம் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
தீவளூா் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவன் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இன்றளவும் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழ்ந்து வருகின்றனா். எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு மின்சார வசதியும், குடிமனை பட்டாவும் வழங்க வேண்டும்.
எழுத்தூா் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மீது ராமநத்தம் காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விருத்தாசலம் கோட்டாசியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை தலைமையில் மனு அளித்தனா்.
மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பிரகாஷ், வட்டச் செயலா் ஏ.அன்பழகன், விருத்தாசலம் வட்டச் செயலா் குமரகுரு, கம்மாபுரம் ஒன்றியச் செயலா் கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.