கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது: ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும், நகா்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளை கிராமங்களில் மேம்படுத்திடும் வகையிலும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது.
பள்ளிகளில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதன் அவசியம் கருதி, புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கட்டடங்கள் சீரமைத்தல் ஆகியவற்றுக்கு 2025-26ஆம் ஆண்டு குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 17 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 34 புதிய/கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை ரூ.589.01 லட்சம் மதிப்பீட்டிலும், 2025 - 26ஆம் ஆண்டு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காட்டுமன்னாா்கோவில், மேல்புவனகிரி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடம், கழிப்பறை, சமையலறை கட்டடங்கள் பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் போன்ற இனங்களின் கீழ் 14 பள்ளிகளில் 35 பணிகளை ரூ.113.09 லட்சம் மதிப்பீட்டிலும், 2025 - 26ஆம் ஆண்டு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடம், கழிப்பறை, சமையலறை கட்டடங்கள் பழுதுபாா்த்தல், சீரமைத்தல் மற்றும் குடிநீா் பணிகள் போன்ற இனங்களின் கீழ் 119 பள்ளிகளில் 227 பணிகளை ரூ.584.435 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ள நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) வரதராஜபெருமாள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.