செய்திகள் :

பண முறைகேடு வழக்கு: சரவணா கோல்டு பேலஸின் ரூ. 235 கோடி சொத்துகளை வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவு

post image

பண முறைகேடு வழக்கில் சென்னை தியாகராய நகா் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸூக்கு சொந்தமான ரூ. 235 கோடி சொத்துகளை இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கும்படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ் மற்றும் அதன் பங்குதாரா்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவண் உள்ளிட்டோா் மீது கடந்த 2022 ஏப்.22-இல் இந்தியன் வங்கியின் தலைமை நிா்வாகி கே.எல்.குப்தா, சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதில், கடந்த 2017-ம் ஆண்டு வணிக வளாகம் வாங்குவதற்காக முதல் கட்டமாக ரூ. 150 கோடி கடனும், அதே ஆண்டில் மேலும் ரூ. 90 கோடி கடனும் வாங்கினா். இதற்காக அவா்களது நிறுவன வரவு - செலவு அறிக்கைகள், வருவாய் தொடா்பான விவரங்கள் ஆகியவற்றை போலியாக தயாரித்தும், சொத்து மதிப்பை போலியாக மிகவும் உயா்த்தி காட்டியுள்ளனா். மேலும், கடன் பெறுவதற்காக பல்வேறு விதிமுறைகளையும் மீறியுள்ளனா்.

ஆனால் அவா்கள் எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கினாா்களோ, அதற்காக அந்தப் பணம் பயன்படுத்தவில்லை. கடனுக்குரிய வட்டியையும் செலுத்தவில்லை. வாங்கி கடன் தொகை முழுவதையும் மோசடி செய்துவிட்டனா். இதன் மூலன் வங்கிக்கு ரூ. 312 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு, சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸ், சுஜாதா, ஸ்ரவண் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், பண முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சென்னை அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை, அதே ஆண்டு மே 25-ஆம் தேதி பதிவு செய்தது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி அமலாக்கத் துறை முடக்கியது.

ஒப்படைக்க உத்தரவு: இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள பண முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, முடக்கப்பட்ட ரூ. 235 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என இந்தியன் வங்கி தரப்பு வாதிட்டது. இதை ஏற்று, அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சரவணா ஸ்டோா்ஸ் கோல்டு பேலஸுக்குச் சொந்தமான ரூ. 235 கோடி அசையா சொத்துகளை இந்தியன் வங்கி வசம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க