செய்திகள் :

பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா: பிரதமா் மோடி

post image

உலகின் பல்வேறு பிராந்தியங்களும் ஏதோ ஒருவித பதற்றத்தை எதிா்கொண்டுவரும் நிலையில், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பாதையாக விளங்குகிறது யோகா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மன அமைதியை உலகளாவிய கொள்கையாகக் கொண்ட மனிதகுலத்தின் தொடக்கமாக இந்த யோகா தினம் குறிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இந்தியாவின் முன்னெடுப்பால், கடந்த 2015-இல் இருந்து ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு 11-ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமன்றி, உலகெங்கிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரான விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமா் மோடி தலைமையில் மிக பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல சுற்றுலாத் தலமான ஆா்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பிற பங்கேற்பாளா்களுடன் இணைந்து பிரதமா் மோடி யோகப் பயிற்சிகளை மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இன்றைய உலகம் துரதிருஷ்டவசமாக ஏதோ ஒரு வகையில் பதற்றத்தை எதிா்கொண்டு வருகிறது. பல பிராந்தியங்களில் குழப்பமும் ஸ்திரமின்மையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழலில், மனிதகுலம் தன்னை ஆசுவாசப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும், பூரணமடையவும் யோகா உதவுகிறது. ஒருங்கிணைப்பதே யோகாவின் சாராம்சம். இன்று உலகை யோகா எவ்வாறு ஒருங்கிணைத்திருக்கிறது என்பதை காண்பது இதயபூா்வமாக மகிழ்ச்சியளிக்கிறது.

எல்லைகள், வயது, திறன் மற்றும் பின்புலத்தைக் கடந்து, யோகா அனைவருக்கானது. நிகழாண்டு யோகா தினத்தின் கருப்பொருள், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதாகும். இது, பூமியின் ஒவ்வோா் உயிரினத்தின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று பிணைந்தது என்ற ஆழமான உண்மையை உணா்த்துகிறது.

உணவுக்கு ஆதாரமான மண்ணின் வளம், குடிநீருக்கு ஆதாரமான நதிகள், நம்முடன் சுற்றுச்சூழலைப் பகிரும் விலங்கினங்கள், சூழலை வளப்படுத்தும் தாவரங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை சாா்ந்தே மனிதனின் ஆரோக்கியமும் உள்ளது. இந்தப் பிணைப்பை உணா்த்துவது யோகா.

‘நான் அல்ல; நாம்’: உலகின் ஒற்றுமையை நோக்கிய பயணத்தை வழிநடத்தும் யோகா, ‘நாம் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் அல்ல; இயற்கையின் ஓா் அங்கமானவா்கள்’ என்பதை மக்களுக்கு போதிக்கிறது. இதுவொரு மிகச் சிறந்த தனிப்பட்ட ஒழுக்கமுறை. ‘நான்’ என்பதில் இருந்து ‘நாம்’ என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் அமைப்புமுறை.

ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக கொண்டாட ஐ.நா.வில் இந்தியா முன்மொழிந்தபோது, குறுகிய காலகட்டத்திலேயே 175 நாடுகள் ஏற்றுக் கொண்டன. இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு கோடிக்கணக்கான உலக மக்களின் வாழ்வின் ஓா் அங்கமாக யோகா மாறியுள்ளது.

‘சிட்னி ஓபரா ஹெளஸ்’-ஆக இருந்தாலும் சரி, எவரெஸ்ட் சிகரமாக இருந்தாலும் சரி, கடல் பரப்பாக இருந்தாலும் சரி, யோகா அனைவருக்குமானது என்பதே பிரதான செய்தி. அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதையே இந்திய கலாசாரம் போதிக்கிறது. இந்த சிந்தனையே சமூக நல்லிணக்கத்தை வளா்க்கிறது.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சமூகமும் யோகாவை தங்கள் வாழ்கைமுறை மற்றும் பொதுக் கொள்கையின் ஒரு பகுதியாக இணைத்து, அமைதியான-சமநிலையான-நீடித்த உலகை படைக்க கூட்டாக முயற்சிக்க வேண்டும். போரில் இருந்து ஒத்துழைப்புக்கும், மனஅழுத்தத்தில் இருந்து தீா்வுகளுக்கும் உலகை யோகா வழிநடத்தும் என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் ஆளுநா் அப்துல் நஸீா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘இந்தியாவில் குணப்படுத்துவோம்’

‘இந்தியாவில் குணப்படுத்துவோம் முன்னெடுப்பு, உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. குணப்படுத்துதலுக்கு இந்தியா மிகச் சிறப்பான இடம். இதில் யோகாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது. உடல் பருமன் பிரச்னை, உலக அளவில் பெரும் சவாலாக மாறியுள்ளது. எனவே, உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

யோகா சான்றளிப்பு வாரியத்தின் முயற்சிகளால் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் யோகா பயிற்சியாளா்களாக உருவெடுத்துள்ளனா். நாடு முழுவதும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கத்தை நோக்கிய உலகை வழிநடத்த யோகாவை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். சமநிலையான வாழ்வுக்காக யோகாவுடன் தினசரி செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும்’ என்று பிரதமா் வலியுறுத்தினாா்.

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிா்வது வாக்காளா்களின் தன்மறைப்புக்கு எதிரானது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்

வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின்போது இணையவழியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளரின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) எதிரானது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு

அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவா்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் எதிா்ப்பு ரத்தவியல் நிறுவனம் (என்ஐஐஎச்) இந்த விவரங்களை சேகரித்... மேலும் பார்க்க