செய்திகள் :

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய பொருளாதார வளர்ச்சி: யோகி ஆதித்யநாத்!

post image

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியா என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

2014-க்கு முன்பு நாம் பலவீனமான மற்றும் நிலையற்ற பொருளாதாரமாக இருந்தோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது நான்காவது இடத்துக்கு வந்திருப்பதாகப் பலரும் பெருமைப்பட்டனர். உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும்போது இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது, ​​கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரிட்டனை நாம் விஞ்சியுள்ளோம். பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய ஒரே பொருளாதார நாடு இந்தியாதான்.

இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானமும் இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. இந்தியா 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ளது.

வம்ச அரசியல் நாட்டின் சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கிறது. வரலாற்றின் தவறுகளை மீண்டும் செய்வதையும், நமது சுதந்திரத்தை மீண்டும் இழப்பதையும் தவிர்க்க வம்ச அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

2014-க்கு முன்னர் இந்தியா அமைதியை ஆதரித்தது என்ற இயல்பை தற்போது மாற்றியுள்ளோம். நமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டினால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று பஹல்காம் தாக்குதல் மூலம் உணர்த்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் 1.43 மணிக்கு நேரிட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்.ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ள... மேலும் பார்க்க

விமான விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடுமையாக சேதமடைந்த விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின... மேலும் பார்க்க

பெங்களூர் கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேருக்கு பிணை!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேல... மேலும் பார்க்க

1990 - 2025: இந்தியாவில் நேரிட்ட முக்கிய விமான விபத்துகள்!

குஜராத்தின் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணித் துளிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத... மேலும் பார்க்க