செய்திகள் :

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய பொருளாதார வளர்ச்சி: யோகி ஆதித்யநாத்!

post image

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியா என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

2014-க்கு முன்பு நாம் பலவீனமான மற்றும் நிலையற்ற பொருளாதாரமாக இருந்தோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது நான்காவது இடத்துக்கு வந்திருப்பதாகப் பலரும் பெருமைப்பட்டனர். உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும்போது இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது, ​​கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரிட்டனை நாம் விஞ்சியுள்ளோம். பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய ஒரே பொருளாதார நாடு இந்தியாதான்.

இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானமும் இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. இந்தியா 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ளது.

வம்ச அரசியல் நாட்டின் சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கிறது. வரலாற்றின் தவறுகளை மீண்டும் செய்வதையும், நமது சுதந்திரத்தை மீண்டும் இழப்பதையும் தவிர்க்க வம்ச அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

2014-க்கு முன்னர் இந்தியா அமைதியை ஆதரித்தது என்ற இயல்பை தற்போது மாற்றியுள்ளோம். நமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டினால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று பஹல்காம் தாக்குதல் மூலம் உணர்த்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க