செய்திகள் :

பனாமா அதிபருடன் சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

post image

பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் அந்நாட்டு அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பயணங்களின் ஒரு பகுதியாக பனாமா நாட்டுக்கு அந்தக் குழு சென்றுள்ளது. பின்னர், இன்று (மே 29) மதியம் பனாமா அதிபர் ஜோஸ் ராவௌல் முலினோவை அவர்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பதிவில், இந்தக் குழுவின் தலைவர் சசி தரூர் கூறுகையில், பனாமா அதிபர் ஜோஸ் ராவௌல் முலினோ இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் மீதான தனது புரிதல் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று (மே 29) மாலை பனாமாவின் இந்தியத் தூதர் சுமித் சேத் வழங்கிய விருந்தில், சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், பனாமா வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய பனாமா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேவியர் மார்ட்டினேஸ் அசா வாஸ்குவெஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கருத்துக்களை பகிரங்கமாகப் பகிர்ந்ததுடன் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்துக் கட்சிக் குழுவில், ஷம்பாவி சௌதாரி (லோக் ஜன்சக்தி கட்சி), சராஃபராஸ் அஹமது (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜி.எம். ஹரிஷ் பாலயாகி (தெலுங்கு தேசம்), சிவசேனையின் மல்லிகார்ஜுன் தேவ்தா மற்றும் மிலிண்ட் தியோரா, பாஜகவின் ஷஷாங் மணி திரிபாதி, தேஜஸ்வி சூரியா, புபனேஸ்வர் கலிதா மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் தரஞ்ஜித் சிங் சாந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தில்லியில் தொடரும் நடவடிக்கை! சட்டவிரோதமாக குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!

மேற்கு வங்கம்: பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிம... மேலும் பார்க்க

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்... மேலும் பார்க்க

சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

பாகிஸ்தானுக்கு தெரிவித்த இரங்கல் அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக,... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு பதிவுக்காக இன்ஸ்டா பெண் பிரபலம் கைது கொல்கத்தா காவல்துறையினால் செய்யப்பட்டுள்ளார். புணேவில் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஷர்மிஸ்தா பனோலி (22) , இன்ஸ்டாகிராமில் பி... மேலும் பார்க்க