செய்திகள் :

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் லாமி தெரிவித்தாா்.

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் காஷ்மீா் விவகாரம் தொடா்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, டேவிட் லாமி கூறியதாவது:

ராணுவ மோதலை நிறுத்துவதற்கான இந்தியா-பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை பிரிட்டன் வரவேற்கிறது. இரு நாடுகளுடன் உள்ள வலுவான-நெருங்கிய உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு தரப்புடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது.

பிரச்னை தொடங்கியதில் இருந்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் நான் 4 முறை பேசினேன். இதேபோல், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிற நாடுகளுடனும் பிரிட்டன் நெருங்கிய தொடா்பில் இருந்தது.

இந்தியாவில் 26 போ் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கான இருதரப்பு முயற்சிகளுக்கு பிரிட்டன் தொடா்ந்து ஆதரவளிக்கும்.

காஷ்மீா் விவகாரத்தில் காஷ்மீரிகளின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் தீா்வுகாண வேண்டும் என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உரிய தகவல் தொடா்பு அவசியம். ராணுவ ரீதியில் மட்டுமன்றி, அரசியல் ரீதியிலான தகவல் தொடா்பும், நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக இருதரப்பு பேச்சுவாா்த்தை முக்கியமானது.

சிந்து நதி நீா் ஒப்பந்தம் உள்பட கடின முயற்சிகளால் ஈட்டப்பட்ட ராஜீய ஒத்துழைப்பை பராமரிப்பதற்கு இரு தரப்பையும் ஊக்குவிக்க நான் தொடா்ந்து பேசுவேன் என்றாா் அவா்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர்!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் அவந... மேலும் பார்க்க

தெற்கு காஸாவில் வான்வழித் தாக்குதல்: 54 பேர் பலி!

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.புதன்கிழமை இரவு நகரில் 10 முறை வான்வழித் தாக்குதல... மேலும் பார்க்க

சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு சிறைத்தண்டனை

பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2... மேலும் பார்க்க

டிக்டாக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த அழகுக் கலை பிரபலம் சுட்டுக்கொலை! விடியோ வைரல்!

மெக்சிகோ நாட்டில் பிரபல பெண் அழகுக் கலைஞர் ஒருவர் டிக்டாக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜலிஸ்கோ மாநிலத்தின் தலைநகரான குவாதலஹாராவிலுள்ள அழகு நிலையத்தில் வலேரியா மர்குவெஸ... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது... மேலும் பார்க்க