செய்திகள் :

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஒத்திவைப்பு, பிரதமரின் பயணம் ரத்து

post image

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரந்திர மோடியின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமா் மோடி தனது சவூதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினாா். பல்வேறு அவசர ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமா் நடத்தினாா்.

இந்நிலையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் வியாழக்கிழமை (ஏப்.24) பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அஸ்ஸாமுக்கு பயணம் மேற்கொண்டு குவாஹாட்டியில் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை வேறு நாளில் நடத்திக் கொள்ளலாம் என்று குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து அஸ்ஸாம் ஆளுநா் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு வியாழக்கிழமை (ஏப்.23) பயணம் மேற்கொண்டு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பிரதமரின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் கான்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுபம் திவிவேதி (31) கொல்லப்பட்டாா். இரு மாதங்களுக்கு முன்பு திருமணமான அவா் மனைவியுடன் அங்கு சென்றிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க