செய்திகள் :

பயணிகளின் காலைப் பொழுதை இனிமையாக்கும் வாசனை அலாரம்! இது எங்கே தெரியுமா?

post image

வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு யுத்திகள் ஹோட்டல் நிர்வாகம் கையாண்டு வருவதை கேள்விப்பட்டிருப்போம்.

ஆஸ்திரேலியாவில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ( Holiday inn Express) என்ற ஹோட்டல் நிறுவனம் தங்களது ஹோட்டலில் வந்து தங்கும் வாடிக்கையாளர்களை எழுப்ப உணவு வாசனைகளை வழங்கும் ஒரு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது பிரேக்ஃபாஸ்ட் அலாரம் என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அலார சத்தம் மூலம் எழுந்துக்கொள்வதற்கு பதிலாக உணவின் வாசனை மூலம் அவர்களை எழுப்புவது தான் இந்த அசத்தல் திட்டத்தின் முயற்சி ஆகும்.

காபி

இந்த சேவை தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள அனைத்து ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டலிலும் வழங்கப்படுகிறது.

மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ஹோட்டல்களிலும் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு இடத்தை பொருத்து அதன் வாசனை மாறுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற இடங்களில் காபி, பேக்கன், ப்ளூபெர்ரி போன்ற வாசனைகள் கொண்டு வாடிக்கையாளரை எழுப்புகின்றனர். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் மாம்பழம் கொண்டு எழுப்பப்படுகிறது.

இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று நிறுவனம் தெரிவிக்கையில் ஒரு ஆய்வின் அடிப்படையிலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக கூறுகின்றனர். அதாவது பயணம் செய்பவர்களில் 58 சதவீதம் பேர் ஒரு இனிமையான வாசனை தங்களது காலை பொழுதை மேம்படுத்துவதாக நம்புவதாக அந்த ஆய்வு கூறி இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து அந்த ஹோட்டலின் டீன் ஜோன்ஸ் கூறுகையில்" பயணத்தின் போது மக்கள் சரியாக தூங்குவதில்லை, சிலர் நேரமின்மை அல்லது பணத்தை சேமிப்பதற்காக காலை உணவை தவிர்க்கிறார்கள்.

இந்த சூழலில் இந்த வாசனை அனுபவம் அவர்களை எழுப்புவதோடு காலை உணவையும் நினைவூட்டும்” என்கிறார். இந்த பிரேக்ஃபாஸ்ட் அலார அனுபவம் அக்டோபர் 20, 2025 முதல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்ற அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்க... மேலும் பார்க்க

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் - ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது. பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பா... மேலும் பார்க்க

Black Swan: இங்கிலாந்திலுள்ள நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப் பறவை; என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-... மேலும் பார்க்க

ஏர்போர்ட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரம்; நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்- பின்னணி என்ன?

டெல்லி விமான நிலையத்தில் துபாயைச் சேர்த்த பயணி ஒருவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ”இது வணிக நோக்கம் கொண்டது” என சுங்க அதிகாரிகள் இதற்குக்... மேலும் பார்க்க

ஆழ்கடலுக்குள் உயிருக்குப் போராடிய நீச்சல் வீரர்; ஆப்பிள் வாட்ச்சால் உயிர் தப்பியது எப்படி?

மும்பையில் சமீபத்தில் கூகுள் காட்டிய வழியைப் பின் பற்றிச் சென்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்தனர். பெண் காரில் சென்று நேரடியாகச் சென்று கடலுக்குள் விழுந்தார். மற்றொரு நபர் பை... மேலும் பார்க்க

``எலுமிச்சை, பூஜை இல்லாமல் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் இல்லை'' - டெஸ்லா கார் வாங்கியவர் பதிவு வைரல்

எந்த ஒரு புதிய வாகனம் விலைக்கு வாங்கினாலும் அதனை உடனே கோயிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பழைய வண்டியை விலைக்கு வாங்கினாலும் அதற்கு ஒரு பூஜை செய்யாமல் இருப்பது கிடையாது... மேலும் பார்க்க