செய்திகள் :

பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ஈரான் நாட்டிற்கான விமானங்கள் வேறு பாதையில் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பயணிகள், ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் கூறி வருகிறது. ஈரானும் பதிலுக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவி வருவதால் ஈரான் பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கான விமானப் போக்குவரத்து சேவை குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளது. எங்களுடைய பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியாவின் சில விமானங்கள் மாற்று நீட்டிக்கப்பட்ட பாதையில் இயக்கப்படுகின்றன.

ஈரான் பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். பயணிகள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்பதை மீண்டும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

பயணிகள் https://www.airindia.com/in/en/manage/flight-status.html என்ற தளத்தில் தங்கள் விமானத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம் என்றும் 011 69329333, 011 69329999 என்ற எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி(வியாழக்கிழமை) ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி கட்டடத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

ஈரான் மீது முழு பலமும் செலுத்தப்படும்! டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை ரஷியா திசை திருப்ப முயற்சி?

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்த... மேலும் பார்க்க

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில்... மேலும் பார்க்க

நைஜீரியா: மர்ம நபர்களின் கொடூரத் தாக்குதலில் 100 பேர் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக த... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரியூவென் அஸாா் சனிக்கிழமை தெரிவித்தாா். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத்... மேலும் பார்க்க

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்... மேலும் பார்க்க