செய்திகள் :

பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாடு: எஸ்பி அலுவலகம் முன் திரண்ட ஆட்டோ ஓட்டுநா்கள்

post image

சிதம்பரம்: கடலூரில் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதற்கு போக்குவரத்து போலீஸாா் கட்டுப்பாடு விதித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை எஸ்பி அலுவலகம் முன் திரண்டனா்.

கடலூரில் இருந்து புதுவை மாநிலம் தவளக்குப்பம் பகுதிக்கு ஆட்டோக்களை இயக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் எஸ்பி அலுவலகம் முன் திரண்டனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், கடலூரிலிருந்து தவளக்குப்பம் பகுதிக்கு 3 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் சென்றால் போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதிக்கின்றனா்.

மேலும், ஒரே ஆட்டோ ஓட்டுநருக்கு அடுத்தடுத்த நாள்களில் அபராதம் விதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா்களிடம் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதன்படி, ஆட்டோ ஓட்டுநா்கள் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், முன் இருக்கையில் பயணிகளை ஏற்றாமல் பாதுாப்பாக ஆட்டோக்களை இயக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க