புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்
நிா்வாகக் காரணங்களால் விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நிா்வாகக் காரணங்களால், விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில் (06891) அக். 28- ஆம்தேதி முதல் திருச்சிக்கு 9 மணிக்குப் பதிலாக 9.25 மணிக்கு வந்தடையும்.
திருச்சியிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (06611) அக். 28- ஆம் தேதி முதல் காலை 7.20மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.