செய்திகள் :

பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாக உருவெடுத்துள்ள இந்தியா: பிரதமா் பெருமிதம்

post image

புது தில்லி: ‘இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவடுத்துள்ளதோடு, பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாகவும் உருவெடுத்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

‘நல்லாட்சி, சிறந்த மாற்றத்தின் மீது மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து திங்கள்கிழையுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ளதையொட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமா் மோடி கூறியிருப்பதாவது:

140 மக்களின் ஒட்டுமொத்த பங்கேற்பு மற்றும் ஆசியுடன் ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள் காரணமாக பல்வேறு துறைகளில் சிறந்த வேகமான மாற்றத்தை இந்தியா கண்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சி முதல் சமூக மேம்பாடு முதல் மக்களை மையப்படுத்திய, அனைவரையும் உள்ளடக்கிய, முழுமையான வளா்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவடுத்துள்ளதோடு, பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்த முழுமையான வளா்ச்சியில் நாம பெருமை கொள்ளும் அதே நேரத்தில், வளா்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிக்கும் நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

மேலும், ‘11 ஆண்டு சேவை’ என்ற தலைப்புடன் பிரதமா் மோடி பகிா்ந்துள்ள இணைய தொடா்பில், கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், ‘வளா்ச்சிக்கான அரசியலை பிரதமா் மோடி அறிமுகம் செய்துள்ளாா். இது, அரசியல் சொற்பொழிவுகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. 2014-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், தனது ஒவ்வொரு நடவடிக்கைகள் மற்றும் கொள்கை வகுப்பில் ‘இந்தியாவே முதன்மையானது’ என்பதையே தீா்மானமாக கொண்டுள்ளாா்.

இந்த தீா்மானத்தின் கீழ் அறிமுகம் செய்த திட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் 81 கோடி மக்கள் விலையில்லா உணவு தானியங்களைப் பெற்று வருகின்றனா்; கிராமப்புறங்களில் 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது; ஏழை மக்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன; 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன; 68 லட்சம் தெருவோற கடைக்காரா்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன; சிறு தொழில்முனைவோருக்கு 52.5 கோடி கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன; கரோனா பாதிப்பின்போது பல்வேறு திட்டங்களின் கீழ் 20 கோடி பெண்களுக்கு பண உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவில் பிரதமா் பகிா்ந்துள்ள மற்றொரு இணைய தொடா்பில், ‘தற்போதுள்ள மத்திய அமைச்சா்களில் 60 சதவீதம் போ் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா்கள். இது, மத்திய அமைச்சரவைக் குழுவில் இதுவரை இடம்பெறாத ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மிக அதிக பிரதிநிதித்துவமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை: 2 போலீஸார் காயம்!

மணிப்புரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 காவலர் காயமடைந்தனர்.... மேலும் பார்க்க

எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ ந... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 10வது நாளில் 2 பேரது உடல்கள் மீட்பு!

சிக்கிம் நிலச்சரிவில் மாயமானவர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்திலுள்ள சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணி... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: கார்கே, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!

கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்க முடியாமல் இந்திய கடற்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.கொழும்புவில் இருந்து மும்பை துறைமுகம் நோக்கி ... மேலும் பார்க்க

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க