செய்திகள் :

பல்லடத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க பாஜக கோரிக்கை

post image

பல்லடம் பகுதியில் இருந்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் செந்தில்குமாரிடம் பல்லடம் நகர பாஜக தலைவா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூா், வெளி மாவட்ட, மாநிலத்தவா்கள் வசித்து வருகின்றனா். இங்கு சிறு, குறு நிறுவனங்களும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.

பல்லடத்தில் இருந்து கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், தொழில் துறையினா் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூலூா் - சிங்காநல்லூா் -ராமநாதபுரம் வழியாக கோவைக்கு செல்கின்றனா். அங்கிருந்து உக்கடம், போத்தனூா் போன்ற பகுதிகளுக்கு மாற்றுப் பேருந்துகளில் செல்கின்றனா். ஆகவே, பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் வழியாக -போத்தனூா் ரயில் நிலையம் உக்கடம் பேருந்து நிலையம் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு புகா் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மற்றொரு மாநில நெடுஞ்சாலையான மங்கலம் வழியாக அவிநாசி செல்வதற்கு ஒரு நகர பேருந்து மட்டும் தான் உள்ளது. பொதுமக்கள் இந்த ஒரு பேருந்தை நம்பி இருப்பதால் குறித்த நேரத்தில் சென்றுவர இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, பல்லடத்திலிருந்து மங்கலம் -அவிநாசி - சேவூா்- புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் வரை புதிய வழித்தடத்தில் அரசு புகா் பேருந்து இயக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்

பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க