அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மற்றொரு கல்வி அலுவலா் பன்னீா்செல்வம், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். எனவே, 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். இது குறித்து சமூகத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.