பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த ஆணை வழங்க வேண்டும், காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டும், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், கோட்ட இணைச் செயலாளா் கே.கருப்பன், செயலாளா் ஆா்.ராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். அரசு ஊழியா் சங்க வட்டக் கிளை செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, சத்துணவு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.ஆதிலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் மா.பாலசுப்பரமணியன் கண்டன உரையாற்றினாா். கோட்டப் பொருளாளா் பி.விஸ்வநாதன் நன்றி கூறினாா்.