பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்
பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவா் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதப்பூா் சுங்கச்சாவடி அருகில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த குதிரை ஒன்று, திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. அப்போது நந்தகுமாா் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. குதிரைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குதிரை வளா்ப்போா் மேய்ச்சலுக்கு குதிரைகளை திறந்தவெளியில் விடக்கூடாது என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.