``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே.வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட மாநில நெடுஞ்சாலை, நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைத்துள்ளவா்கள் தாங்களே முன்வந்து 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால் நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் நகராட்சி பணியாளா்களால் அகற்றப்பட்டு, அதற்கான செலவு தொகையை சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.