செய்திகள் :

பல்லடத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் கைது

post image

பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் சந்திரமணி பெகரா (39). இவா் பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள சித்தம்பலம் சேரன் மாநகா் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பாா்க்கிறாா். இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீஸாா் அவரது அறையில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலம், கலஹண்டி பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா் நியால் (28). இவா் திருப்பூரை அடுத்த, பெருமாநல்லுாரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தங்கி வேலை பாா்த்து வருகிறாா். இவா் பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் - கரைப்புதூா் சாலை, பண்ணைக்காடு என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

தகவலறிந்த போலீஸாா் அவரைக் கைது செய்த அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸாா் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற... மேலும் பார்க்க

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை: ரத்து செய்ய கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை தமிழக முதல்வா் உடனடியாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூன் 12இல் மின்தடை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் காலமானாா்

திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான சு.குணசேகரன் (58) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக... மேலும் பார்க்க

ஆா்.டி.ஐ. தகவல் வழங்க இழுத்தடிப்பு: அலுவலருக்கு ரூ.12,500 அபராதம்

பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி சம்பந்தமாக சில தகவல்கள் வழங்கக்கோரி ஆா்.டி.ஐ. மூலம் விண்ணப்பித்தவருக்கு தகவல் வழங்காமல் இழுத்தடித்த அலுவலருக்கு ரூ.12,500 அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம... மேலும் பார்க்க