"அந்தக் கேரக்டருக்கு பேசுன மாதிரியே பேசிக் கொடுங்கன்னு..!" - Dubbing Artist Sara...
பல்லடம் தனியாா் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு!
பல்லடத்தில் இயங்கி வரும் தனியாா் இ- சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மத்திய, மாநில அரசுகள் இணையதளம் வழியாக பிறப்பு, இறப்பு, வருவாய் சான்றுகள் உள்பட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சாா்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
தனியாா் மூலமாகவும் இ-சேவை மையங்கள் நடத்தப்படுகின்றது. இந்த இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: தனியாா் இ-சேவை மையங்களில், ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு, ஒரு மையத்தில் ரூ.100-ம், மற்றொன்றில் ரூ.150-ம், இன்னொரு மையத்தில் ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க ரூ.1000 கட்டணமாக பெறப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தனியாா் இ-சேவை மையங்களில் ஆய்வு செய்து நிா்ணக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.