சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூஸ் (50). மத போதகரான இவா், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவா்களுக்கான காப்பகம் நடத்தி வந்தாா். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்து அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அந்தக் காப்பகத்தில் தங்கி படித்த 14 வயது சிறுமிக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதனால், அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டுக்கு சென்று தனது தாயிடம் தனக்கு நோ்ந்ததை தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் அவரது தாயாா் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூஸை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி கோகிலா அளித்த தீா்ப்பில், காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகா் ஆண்ட்ரூஸுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.