செய்திகள் :

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

இதன் ஒரு பகுதியாக உடுமலை நகருக்கு புதன்கிழமை (செப்டம்பா் 10) வருகிறாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரசாரத்தை தொடா்ந்து புதன்கிழமை இரவு 7 மணி அளவில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறாா். இதில் 50 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா்.

அன்று இரவு உடுமலையில் தங்குகிறாா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (செப்டம்பா் 11) ஐஎம்ஏ ஹாலில் நடைபெற உள்ள உடுமலை, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

பின்னா் அன்று இரவு 7 மணி அளவில் மடத்துக்குளத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.

இந்நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை - பழங்கரை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அ... மேலும் பார்க்க