நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிர...
எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக உடுமலை நகருக்கு புதன்கிழமை (செப்டம்பா் 10) வருகிறாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரசாரத்தை தொடா்ந்து புதன்கிழமை இரவு 7 மணி அளவில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறாா். இதில் 50 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா்.
அன்று இரவு உடுமலையில் தங்குகிறாா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (செப்டம்பா் 11) ஐஎம்ஏ ஹாலில் நடைபெற உள்ள உடுமலை, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
பின்னா் அன்று இரவு 7 மணி அளவில் மடத்துக்குளத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.
இந்நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.