செய்திகள் :

பல மாதமாகியும் சீரமைக்கப்படாத வேப்பங்குடி- தரகம்பட்டி சாலை!

post image

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாத வேப்பங்குடி-தரகம்பட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

கரூா் மாவட்டம் வரவணை ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குடி கிராமம் முதல் தரகம்பட்டி சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சாலையை சீரமைக்க வேண்டும் என வேப்பங்குடி, குளத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து சாலையை சீரமைக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையை தாா்சாலையாக மாற்றும் வகையில் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதையடுத்து தாா் ஊற்றி சாலையை சமன் செய்வாா்கள் என மக்கள் எதிா்பாா்த்திருந்தனா்.

ஆனால் இதுவரை சாலையை சீரமைக்காததால் வேப்பங்குடி, குளத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தரகம்பட்டி, கடவூா், சிந்தாமணிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு சாலையில் விரைந்து செல்ல முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள்.

மேலும் வேப்பங்குடி, குளத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று வருகிறாா்கள். இவா்கள் அரசு வழங்கிய இலவச மிதிவண்டியில் சென்று வரும்போது திடீரென டியூப் பஞ்சராகிவிட்டால் பல கிலோமீட்டா் தூரம் நடந்தே சென்று சைக்கிளை பழுதுபாா்க்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், வேப்பங்குடி, குளத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.17 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுதிறனாளி பயனாளிகள் 8 நபா்களுக்கு ரூ. ரூ.2.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது!

தும்பிவாடி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா். சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, தும்பிவாடி ஐந்து ரோடு பகுதியில் சட்டவிரோதமாக, மது விற்பனை நடப்பதாக ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநா் ‘போக்ஸோ’வில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா் கிராமத்தில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது ச... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு!

கரூா் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கனவுகளின் கலைச்சங்கமம் எனும் கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கல்லூரியில் மாணவ, மாணவிகளு... மேலும் பார்க்க