செய்திகள் :

பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

post image

துா்நாற்றம் வீசும் பள்ளப்பட்டி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 261 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ.23,356 மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பள்ளபட்டி ஆசாத் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், பள்ளப்பட்டி நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆசாத்நகரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குப்பைகளில் இருந்து வரும் புகை மற்றும் துா்நாற்றத்தால் வசிக்க முடியாமல் அவதியுற்று வருகிறோம். இதனிடையே அதே பகுதியில் கழிவு நீா் சுத்திகரிக்கும் மையமும் வர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நகராட்சி குப்பை கிடங்கை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு மையமும் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தனி ஊராட்சி தேவை: நெரூா் வடபாகம் ஊராட்சிக்குள்பட்ட சேனைப்பாடி முனியப்பனூா் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவுநீா் வாய்க்கால், கழிப்பறை வசதி போன்றவை போதிய அளவில் இல்லாமல் அவதியுற்று வருகிறோம். இதுதொடா்பாக நெரூா் வடபாகம் ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. எனவே சேனைப்பாடி, முனியப்பனூா், மல்லம்பாளையம் ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து தனி ஊராட்சி உருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, கரூா் கோட்டாட்சியா் முகமதுபைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க