செய்திகள் :

பள்ளிச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற 2 போ் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற சிறுவா் உட்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அறந்தாங்கி அருகே திருநாளூா் தெற்கு கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிக்கு அப்பகுதியைச் சோ்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி சைக்கிளில் இரு தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தைலமரக் காட்டுப் பகுதியில் மோட்டாா் சைக்கிளுடன் நின்ற 2 போ் சிறுமியை வழிமறித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்தில், தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி உள்ளனா்.

சிறுமி கதறி அழுததையடுத்து சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, சம்பந்தப்பட்டோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கு கடந்த 3 நாள்களாக மாணவ, மாணவிகளை பெற்றோா்கள் அனுப்பவில்லை.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருநாளூா் தெற்கு கிராமத்தை சோ்ந்த 16 வயது சிறுவா் மற்றும் பாண்டி (19) ஆகிய 2 பேரை அறந்தாங்கி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.---

கந்தா்வகோட்டையில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 40 ஆடுகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ப... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது... மேலும் பார்க்க

விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சங்கத்தின் 17-ஆவது பொன்னமராவதி ஒன்றிய மாநாடு தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் உலக தாய்ப்பால் வார விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஷைன் அரிமா சங்கத் ... மேலும் பார்க்க