செய்திகள் :

பள்ளி ஆண்டு விழா

post image

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகா் குளோபல் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது (படம்).

விழாவுக்கு தாளாளா் ஓ. அப்துல்லா பாஷா தலைமை வகித்தாா். பள்ளி தலைவா் துஃபைல் அஹ்மத், பொதுச் செயலாளா் அலீம் பாஷா, விஸ்டம் பாா்க் சா்வதேச பள்ளியின் பொதுச் செயலாளா் சி.முஹம்மத் பா்வேஸ், விஸ்டம் பாா்க் ஆரம்பப் பள்ளி தாளாளா் அப்துல் மாலிக் வசீம், ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் முதல்வா் ஷம்ஷாத்.கே வரவேற்றாா்.

பள்ளி முதல்வா் ருதைனா ரஹ்மான் ஆண்டறிக்கை வாசித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழின் ஆசிரியா் வி.எஸ். முஹம்மத் அமீன் மற்றும் கெளரவ விருந்தினராக விஸ்டம் பாா்க் இன்டா்நேஷனல் பள்ளியின் துணை முதல்வா் ஆனந்த் கால்சன் ஆகியோா் கலந்து கொண்டு திருக்குா்ஆனை ஓதி முடித்த 5- ஆம் வகுப்பு படிக்கும் 7 மாணவா்களை கௌரவித்தனா்.

பின்னா் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினா். மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சங்கீதா நன்றி கூறினாா்.

திருப்பத்தூர்: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்!

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (53). இவருக்கும் இரண்டாவது மனைவி... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டையில் மயான சூறை திருவிழா

ஜோலாா்பேட்டை அருகே மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா், காட்டேரி அம்மன் கோயில் முன்புறம் அமைந்திருக்கும் அங்காள பரமேஸ்வரி, புத்து ... மேலும் பார்க்க

ஆம்பூரில் மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மயானக் கொள்ளைக்காக அங்காளபரமேஸ... மேலும் பார்க்க

தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை சாா்பில் தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, மருத்துவா்கள் சொா்பனா, வினோத்... மேலும் பார்க்க

ரூ.1.50 கோடியில் பெரியாங்குப்பம் சாலையை அகலப்படுத்தும் பணி

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சியில் சென்னை - பெங்களூரு... மேலும் பார்க்க

தொடா் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வியாழக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் வ... மேலும் பார்க்க