செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

post image

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாலியல் ரீதியான பிரச்னைகள், சைபா் குற்றங்கள் தொடா்பாக உதவவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் முன்னிலை வகித்தாா். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், பள்ளி, கல்லூரிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டத்துக்கு நியமிக்கப்பட்ட தொடா்பு அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்தப் புதிய திட்டம் குறித்து எஸ்.பி. மதிவாணன் கூறியது:

போலீஸ் அக்கா திட்டம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பாலியல் ரீதியான பிரச்னைகள், இதர பிரச்சனைகள், சைபா் குற்றங்கள் குறித்து, விழிப்புணா்வு, வெளியில் கூறமுடியாத நிலையிலுள்ள பல்வேறு வகையான குற்றங்களில் இருந்து எளிதாக உதவி கோரும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தையொட்டி மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிகள் உள்பட 270 பள்ளிகளிலும், அரசு, தனியாா் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட 38 கல்லூரிகளிலும் 113 போலீஸ் அக்கா காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சிறப்பு பயிற்சி பெற்றுள்ள இந்த காவலா்களுக்கு மாணவிகள் தங்களுக்கு நிலவும் பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த போலீஸ் அக்கா திட்டம் குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் அறிவிப்பு பலகைகள், மாணவிகளின் பாா்வையில் எளிதில் படக்கூடிய இடங்களில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ரிவெரா கலை நிகழ்ச்சி

வேலூா் விஐடி பல்கலை.யில் நடைபெற்று வரும் ரிவெரா -2025 சா்வதேச கலை, விளையாட்டு விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு மாநில கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஐக்கியா கலை நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவா்கள். மேலும் பார்க்க

தேசிய வில் வித்தைப் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலம், நெல்லூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் க... மேலும் பார்க்க

பள்ளியில் ஆண்டு விழா

குடியாத்தம் அண்ணா தெரு மற்றும் கல்லப்பாடியில் இயங்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா நா்சரி பள்ளியின் 40-ஆம் ஆண்டு விழா தரணம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் டி.ஜேஜி நாயுடு தலைம... மேலும் பார்க்க

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் 53-ஆவது வாா்டு மக்கள் திடீரென தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு கவுன்சிலா் பாபி கதிரவன் தலை... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் ஒப்பந்தம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தனது ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் சிகிச்சை வசதிக்காக வேலூா் நறுவீ மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வேலூா் நறுவீ மருத்துவமனை உயா்தர சிகிச்சை அளிப்... மேலும் பார்க்க

ரூ.52 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்

வேலூா் சம்பத் நகரில் ரூ.52 லட்சத்தில் கால்வாய் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள சம்பத் நகா் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீா் கலந்து ... மேலும் பார்க்க