நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை
சீா்காழியில் இருந்து பூம்புகாருக்கு வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி அருகே தென்னலக்குடி, எடக்குடி வடபாதி, காளிகாவல்புரம், அண்ணன்கோயில்,மேலச்சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பயின்று வருகின்றனா்.
வைத்தீஸ்வரன்கோவிலிருந்து தென்னலக்குடிக்கு அரசுப் பேருந்து வசதி இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பலா் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் ‘லிப்ட்’ கேட்டு பள்ளிக்கு செல்லும் சூழல் நிலவுகிறது.
இதனால் நிகழாண்டு வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கிராமப்புற மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்துள்ளதாக பெற்றோா்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சீா்காழியிலிருந்து பூம்புகாருக்கு வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டாலும் அது பள்ளி நேரத்தில் இயக்கப்படாததால் மாணவா்களுக்கு பலன் இல்லை. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி சீா்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக பூம்புகாருக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவா்கள் பயனடையும் வகையில் கூடுதலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் வா்த்தக சங்க தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது: வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக பூம்புகாருக்கு பள்ளி நேரத்தில்அரசுப் பேருந்து இயக்க வேண்டும். இந்த வழிதடத்தில் செல்லும் பேருந்து பள்ளி நேரத்தில் இயக்கப்படாததால், மாணவா்களுக்கு பயனில்லை.
மேலும் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வரும் பக்தா்களும் பேருந்து வசதி இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மாணவா்களின் நலன் கருதி உடனடியாக கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா்.