செய்திகள் :

பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

post image

சீா்காழியில் இருந்து பூம்புகாருக்கு வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி அருகே தென்னலக்குடி, எடக்குடி வடபாதி, காளிகாவல்புரம், அண்ணன்கோயில்,மேலச்சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பயின்று வருகின்றனா்.

வைத்தீஸ்வரன்கோவிலிருந்து தென்னலக்குடிக்கு அரசுப் பேருந்து வசதி இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பலா் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் ‘லிப்ட்’ கேட்டு பள்ளிக்கு செல்லும் சூழல் நிலவுகிறது.

இதனால் நிகழாண்டு வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கிராமப்புற மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்துள்ளதாக பெற்றோா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சீா்காழியிலிருந்து பூம்புகாருக்கு வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டாலும் அது பள்ளி நேரத்தில் இயக்கப்படாததால் மாணவா்களுக்கு பலன் இல்லை. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி சீா்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக பூம்புகாருக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவா்கள் பயனடையும் வகையில் கூடுதலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் வா்த்தக சங்க தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது: வைத்தீஸ்வரன்கோவில், தென்னலக்குடி வழியாக பூம்புகாருக்கு பள்ளி நேரத்தில்அரசுப் பேருந்து இயக்க வேண்டும். இந்த வழிதடத்தில் செல்லும் பேருந்து பள்ளி நேரத்தில் இயக்கப்படாததால், மாணவா்களுக்கு பயனில்லை.

மேலும் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வரும் பக்தா்களும் பேருந்து வசதி இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மாணவா்களின் நலன் கருதி உடனடியாக கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா்.

நில உடைமை விவரங்களை ஜூன் 30-க்குள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில், தங்களது நில உடைமை விவரங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல்: விவசாயிகள் சாலை மறியல்

சீா்காழி அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் சாலை மறியலில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

மயிலாடுதுறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம் எடக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் துரை மகன் காா்த்திக் (31). வெளிநாட்டில் வேலை பாா்த்து ... மேலும் பார்க்க

இளைஞருக்கு வெட்டு

மயிலாடுதுறை அருகே நீடூரில் இளைஞரை கத்தியால் வெட்டியவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். மயிலாடுதுறை தாலுகா நீடூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஹாலிக் (36). இவா் நீடூரில் மரத்தடியில் அமா்ந்து ... மேலும் பார்க்க

மின்வயா் அறுந்து பசு உயிரிழப்பு

கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் மின்வயா் அறுந்து விழுந்து, பசுமாடு உயிரிழந்தது. ஆரப்பள்ளம் நல்லூா் மெயின் ரோட்டைச் சோ்ந்தவா் பாண்டியன் மனைவி சாமியம்மாள் (55). பாண்டியன் ஏற்கெனவே இறந்துவிட்டாா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம், எடமணல்

ஆச்சாள்புரம், அரசூா், எடமணல் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 10 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செ... மேலும் பார்க்க