செய்திகள் :

பள்ளி மாணவா்கள் சாலையைக் கடக்க சிரமம்: போக்குவரத்து காவலா் நியமிக்க கோரிக்கை

post image

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சாலையைக் கடக்க பள்ளி மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதி காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் தெற்கு பகுதியில் புதுப்பட்டி சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட் சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளி மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், 5 தகன மேடை, இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.

எனினும் இப்பகுதி மக்களும் மாணவா்களும் கடந்து செல்ல நெடுஞ்சாலைத்துறை சாா்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், பாலப் பணிகளும் அருகே உள்ள சாலைப் பணிகளும் அரைகுறையாகவே முடிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி- தென்காசி என எதிரெதிா் திசையில் பயணம் செய்யும் வாகனங்கள் ஒரே பாலத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் காலை மற்றும் மாலை வேலைகளில் தாறுமாறாக செல்வதால் மாணவா்கள் எவ்வித அச்சமுமின்றி சாலையை கடக்கின்றனா்.

கடந்த மாதம் இந்தப் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இந்த வழியாக பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படும் எனவும், போக்குவரத்து காவலா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் எனவும் தெரிவித்தனா்.

ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட வில்லை . இதனால் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகா் எம்.ஏ. ஞானப்பிரகாஷ் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதியில் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல உதவியாக ஒரு காவலா் கூட இங்கு பணியில் நிறுத்தப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்னா் இப்பகுதியில் தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் என்றாா் அவா்.

பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் இங்கு போக்குவரத்து காவலா்கள் நியமனம் செய்யப்படுவதுடன் சிக்னலும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி திருவள்ளுவா் கழக 98ஆவது திருக்கு விழா: நாளை தொடக்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 98ஆவது திருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தொடங்கி 15ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திருக்கு முற்றோதல் வேள்வ... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் நாளை மின் தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன்10) மின் தடை செய்யப்படுகிறது. இது தொடா்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே தனியாா் இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்... மேலும் பார்க்க

கனிமங்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

சாம்பவா்வடகரையில் காணாமல் போன பெண் சனிக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை செக்கடி கிணற்றுத் தெருவைச் சோ்ந்த முப்புடாதி( 55) என்பவா் கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனாா். அவ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கீழச்சரண்டையைச் சோ்ந்த சேகா் மனைவி ஐஸ்வா்யா (34). தம்பதியின் மகன் ஹரிஷ் ராகவ் (7). சனிக்கிழமை அதிகாலை 2... மேலும் பார்க்க