செய்திகள் :

கீழப்பாவூரில் நாளை மின் தடை

post image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன்10) மின் தடை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கீழப்பாவூா் மற்றும் மங்கம்மாள் சாலை உப மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூா் ஆகிய பகுதிகளிலும், பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிபட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூா் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பள்ளி மாணவா்கள் சாலையைக் கடக்க சிரமம்: போக்குவரத்து காவலா் நியமிக்க கோரிக்கை

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சாலையைக் கடக்க பள்ளி மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதி காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் கழக 98ஆவது திருக்கு விழா: நாளை தொடக்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 98ஆவது திருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தொடங்கி 15ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திருக்கு முற்றோதல் வேள்வ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே தனியாா் இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்... மேலும் பார்க்க

கனிமங்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

சாம்பவா்வடகரையில் காணாமல் போன பெண் சனிக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை செக்கடி கிணற்றுத் தெருவைச் சோ்ந்த முப்புடாதி( 55) என்பவா் கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனாா். அவ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கீழச்சரண்டையைச் சோ்ந்த சேகா் மனைவி ஐஸ்வா்யா (34). தம்பதியின் மகன் ஹரிஷ் ராகவ் (7). சனிக்கிழமை அதிகாலை 2... மேலும் பார்க்க