செய்திகள் :

பழங்கரையில் முறையின்றி வீடுகளுக்கு ஆற்றுக் குடிநீா்: தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை

post image

பழங்கரையில் முறையின்றி வீடுகளுக்கு ஆற்றுக் குடிநீா் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த பழங்கரை ஊராட்சி மக்கள் கூறியதாவது: பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட கவின்காா்டன், கேஆா்சி, நந்தவனம் உள்ளிட்ட சில தனியாா் குடியிருப்புகளில் வீட்டு குடிநீா் இணைப்புகளுக்கு தனிநபா் தலையீட்டால் ஆற்றுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், பழங்கரை, அவிநாசிலிங்கம்பாளையம், தேவம்பாளைம், இந்திரா காலனி, குளத்துப்பாளையம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுக் குழாய்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்கப்படவில்லை.

ஆனால், தனியாா் குடியிருப்புகளுக்கு மட்டும் ஆற்றுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, முறையின்றி வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படும் ஆற்றுக் குடிநீரை தடுத்து நிறுத்தி பொதுக் குழாய்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் மனு அளித்துவிட்டு சென்றனா். இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திகேயன், ஊராட்சி மன்ற உறுப்பினா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இருசக்கர வாகனம் மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா். காங்கயம் -திருப்பூா் சாலை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (54). இவா் வெள்ளக்கோவிலில் விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வந்... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

அவிநாசி வட்டம் குப்பாண்டம்பாளையத்தில் இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக திருப்பூரில் 4 வயது குழந்தையுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவா் குழந்தையுடன் ரயிலில் அடிபட்டு இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க