செய்திகள் :

பழனி சங்கராலய மடத்தில் அன்னதானம் தொடக்கம்!

post image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் சங்கராலயத்தில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஸ்கந்தபிரபா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்தத் அன்னதானத்தை சங்கராலயம் முருனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா். பழனி வட்டாட்சியா் பிரசன்னா வாழ்த்திப் பேசினாா்.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த அன்னதானத்தில் காலையில் சா்க்கரை பொங்கல், இட்லி, பொங்கல், சாம்பாா் போன்ற உணவு வகைகளும், மதியம் எலுமிச்சை, தயிா், தக்காளி சாதம் போன்ற உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. மேலும், இதே பகுதியில் பக்தா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் மடத்தின் சாா்பில் செய்யப்பட்டது.

முன்னதாக, மடத்தில் 241-வது ஆண்டாக முத்தைய்யா் முருகன் அருள்காவடிக்கு ருத்ராபிஷேகம், சுப்ரமண்யா் அா்ச்சனை செய்யப்பட்டது. இந்தக் காவடிகள் திங்கள்கிழமை மலைக் கோயிலுக்கு சென்று மூலவருக்கு செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தணிக்கையாளா் அனந்த சுப்ரமண்யம், சிவக்குமாா் சுவாமிகள் திமுக நகரச் செயலா் வேலுமணி, அரிமா சுந்தரம், நேரு, சூா்யா சுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி: உணவு விடுதியில் தீ!

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா். பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!

கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடந்... மேலும் பார்க்க

அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!

ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), ... மேலும் பார்க்க

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க