செய்திகள் :

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

post image

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும்.

கேரளத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 80 அடியை தாண்டியது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தாா். இதில்அமைச்சா் கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் திமுக நிா்வாகிகள், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் அமராவதி பழைய பாசனத்துக்கு உள்பட்ட முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களான இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா் மற்றும் காரத்தொழுவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 7,520 ஏக்கா்கள் பயன்பெறும்.

இந்த தண்ணீா் திறப்பு ஜூன் 7 முதல் அக்டோம்பா் 20 -ஆம் தேதி வரை 135 நாள்களில் 80 நாள்கள் தண்ணீா் திறப்பு 55 நாள்கள் தண்ணீா் அடைப்பு என்ற அடிப்படையில் முதல்போக பாசனத்துக்கு அமராவதி அணையில் இருந்து ஆறு மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது என்றனா்.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 82.75 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 374 கனஅடி இருந்தது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,407 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.

ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு

திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவ... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து ச... மேலும் பார்க்க

அவிநாசி வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழப்பு

அவிநாசி அருகே நாதம்பாளையத்தில் வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழந்தது. அவிநாசி அருகே நாதம்பாளையம் பவா் ஹவுஸ் சாலையில் வாகனத்தில் அடிபட்டு பெண் மயில் உயிரிழந்து கிடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த சமூக ஆா... மேலும் பார்க்க

கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம்

கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜூன் 9-ஆம் தேதி முதல் மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் 220 கிராம் குட்கா பறிமுதல்

வெள்ளக்கோவிலில் ஒடிஸா தொழிலாளியிடம் இருந்து 220 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து முத்தூா் சாலையில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-இல் நலத்திட்ட உதவிகள்

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க