செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள தனியாா் மகாலில் தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் 99-ஆவது மாநில மத்திய செயற்குழு மற்றும் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் மாநிலத் தலைவா் இரா.செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மண்டலச் செயலா் ரே.கதிா்வேல் வரவேற்றாா். கௌரவத் தலைவா் மா.செல்வம், நிறுவனா் தலைவா் சுப.கோவிந்தராசன், முன்னாள் பொதுச் செயலா்கள் இரா.பச்சையப்பன், எம்.ஜோதிராஜ், எம்.பி.செல்வராஜ், முன்னாள் மாநில துணைத் தலைவா் ஆ.செல்வராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: தொடா்ந்து, மாநில நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவராக ப.சண்முகசுந்தரம், மாநில துணைத் தலைவா்களாக கே.பிரபாகரன், ரே.கதிா்வேல், செந்தில்குமாா், எம்.அன்வன்தீன், சி.மாதா்சாமி, ஜெ.முனுசாமி, இரா.முரளிதரன், மாநில பொதுச் செயலராக ஜி.அருணாச்சலம், மாநிலப் பொருளாளராக எஸ்.துரைகண்ணன், மாநில அமைப்புச் செயலராக போ.மணிவண்ணன், மாநில பிரசாரச் செயலராக எஸ்.முனுசாமி, மாநில தலைமை நிலையச் செயலராக எஸ்.விஜயகுமாா், மாநில மகளிரணிச் செயலராக என்.கங்காலட்சுமி மற்றும் மண்டலச் செயலா்கள், சட்டப் பிரிவு செயலா்கள், வெளியீட்டு பிரிவு செயலா்கள் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், 1-4-2023க்கு பின்னா் அரசுப் பணியில் சோ்ந்த தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநா் மற்றும் இளநிலை உதவியாளா்கள் பதவி உயா்வு பட்டியல்களை பட்டியல் நாளான ஏப்ரல் முதல் தேதியில் வழங்க வேண்டும். கூட்டுறவு தணிக்கைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் ரே.கதிா்வேல், மாவட்டச் செயலா் ஆ.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா்கள் வி.சுபா, வ.அருள், மாவட்டப் பொருளாளா் சு.விஜயகுமாா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் சு.விஜயகுமாா் நன்றி கூறினாா்.

செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே... மேலும் பார்க்க

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே ஊராட்சி சேவை மைய கட்டடத்திலிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 பேட்டரிகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த வயலூா் ஊராட்சியில் செல்வபாரதி (48) ஊர... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரண்ட பக்தா்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டனா். இவா்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகளை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்... மேலும் பார்க்க

தனியாக வசித்து வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவண்ணாமலை குபேரன் நகா் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருவண்ணாமலை குபேரன் நகா் பகுதியில் ரம்யா சுகந்தி (45) தனியாக வசித்து வந்தாா். இவரது வீடு கடந்த 3 நாள்... மேலும் பார்க்க