செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவம்!

post image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரஜெளரி உள்ளூர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்படவும், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது மற்றும் உதவிகளைப் பெறுவது குறித்து கிராம மக்களுக்கு ராணுவத்தினர் பயிற்சி அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம், கிராம பாதுகாப்புக் குழுவை உருவாக்கி, அக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி மற்றும் சிறப்புத் திறன் வளர்க்கும் திட்டத்திலும் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப்புற மாவட்டங்களிலுள்ள உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளில் ராணுவம் இறங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில் தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில்... மேலும் பார்க்க

நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவி மும்பை போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், நவி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக பாகிஸ்தானின் முன்னாள் கிர... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பய... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க